Monday, November 30, 2015

தேய்ந்திறுதல்



ஜெ

வழக்கமாக வெண்முரசு நாவல்கள் முடியும்போது ஒரு துக்கமும் தனிமையும் வந்துசேரும். இந்திரநீலம் முடியும்போதுகூட திருஷ்டதுய்ம்னன் நண்பனை விட்டுவிலகிச்செல்லும்போது ஒரு சின்ன துக்கம் வந்தது. அது இவர்கள் என்னாவார்கள் என்று தெரிந்ததனால் வந்த துக்கமும்கூடத்தான். ஆனால் இந்த நாவல் உற்சாகமாக முடிகிறது. இதிலும் அபிமன்யூ வந்ததுமே விதியைப்பற்றிய குறிப்பு வந்துவிடுகிறது. ஆனாலும் சிறுவர்களின் உலகம் என்பதனால் உற்சாகம் இருந்துகொண்டே இருக்கிறது.

உச்சகட்டத்தில் நாவலை முடிப்பதில்லை நீங்கள். எப்போதுமே கொஞ்சம் கீழிறக்கி ஒரு தேய்ந்திறுதலைத்தான் கொடுக்கிறீர்கள். விஷ்ணுபுரம் ஏழாம் உலகம் எல்லாமே அப்படித்தான் இருந்தன. [காடு மட்டும்தான் விதிவிலக்கு] ஆனால் இந்நாவல் உற்சாகமான மெல்லிய ஒரு சரிந்திறங்கி முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு வகையாக இருப்பது ஆச்சரியமான இனிமை

சங்கரநாராயணன்