Friday, November 17, 2017

அதிமானுடம்



அன்புள்ள ஜெ,

வெண்முரசு வாசிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும், அதன் முதன்மையான ஒன்றாக எனக்குத் தோன்றுவது அதன் அதிமானுட தருணங்களே! அதிமானுடம் என்பது சாகசமோ, வீரமோ அல்ல. ஒரு மானுடன் தன் விழைவை, தான் அரிதென்று கருதிய ஒன்றை ஒரு நியதிக்காக முழு மனதோடு விட்டுக்கொடுக்கையில் விழியில் நிறையும் நீர் தான். அதை நல்கியதாலேயே தந்தையும் மகனும் என் பிரியத்துக்குரியவர்கள் ஆனார்கள். இன்று துரியனும், பலராமரும் சந்திக்கும் தருணம் அத்தகைய ஒன்றே!! நிறைந்த கண்களுடன் எழுதுகிறேன்..

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்