Friday, November 24, 2017

திரௌபதியும் கிருஷ்ணையும்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றய 'எரிதழலில்' கிருஷ்ணையின் மணவிழாவிற்கு தான் போக தோன்றாததை எண்ணி எண்ணி யுதிஷ்டிரர் மாய்வதும்,தனக்கு ஆதரவாக 
திரௌபதி  ஏதாவது கூறுவாள் என எண்ணி அவளிடம் கேட்பதும்,அவளோ என் வாழ்த்துக்களை முதன்மை சேடியின் மூலம் அனுப்பினேன் என்று கூறி   சற்றும் யாரும் எதிர்பாராதவாறு யுதிஷ்டிரரை திகைக்க செய்கிறாள்!.ஆனால் இதற்கு மேல்தான் தங்களின் கைவண்ணம் உச்சம் பெறுகிறது!. மணப்பரிசாக  முன்பு கிடைத்த  பட்டாடையை கொடுக்கச்சொன்னேன் என்று கூறி வாசிக்கும் எங்களெல்லாரையும் கூட ஒரு கணம் துணுக்குற செய்துவிட்டீர்கள்!.எப்பேர்ப்பட்ட இக்கட்டான சூழலில்  தனக்கு கிடைத்த பட்டாடையை,ஒரு பெண்ணுக்கு தன் வாழ்நாளில் மிக முக்கியமாக கருதும் ஒரு தருணத்தில் நினைவுறுத்தி/அளித்து தனது நன்றிக்கடனை செலுத்திவிட்டாள்!.(எப்படித்தான் உங்களுக்கு எப்படி மிக கச்சிதமாக எழுதத்தோன்றுகிறதோ?!)

அன்புடன்,

அ .சேஷகிரி