Monday, November 20, 2017

மைந்தர்



அன்புள்ள ஜெ

உபபாண்டவர்களின் குணாதிசயங்கள் அப்படியே அவர்களின் தந்தையைப்போலவே உள்ளன என்று தோன்றியது. அவர்கள் தந்தையரிடமிருந்து நுட்பமான வேறுபாட்டை கொண்டிருப்பதை நான் சற்றுக்கழித்துத்தான் புரிந்துகொண்டேன். தந்தையரிடம் இருக்கும் ஆசையும் வன்மமும் அவர்களிடம் இல்லை. அவர்கள் வசதியாக வளர்ந்தவர்கள். ஆகவே உல்லாசமாக இருக்கிறார்கள். அரசு சூழ்தலைக்கூட விளையாட்டாகவே செய்கிறார்கள். அந்த விளையாட்டு தோற்றாலும் கவலைகொள்வதில்லை.

ஆனால் நுட்பமான வேறுபாடு யௌதேயனுக்கும் பிரதிவிந்தியனுக்கும் இடையே இருப்பதுதான். இருவருமே யுதிஷ்டிரனின் குணாதிசயத்தைத்தான் பொதுவாகக் கொண்டிருக்கிறார்கள். நூல்வாசிப்பது நெறிகளைப்பேசிக்கொண்டிருப்பது. ஆனால் அதேசமயம் அவர்களுக்கு மேலும் சில குணவேறுபாடுகள் உள்ளன. யௌதேயன் சூழ்ச்சிக்காரன். நிதானமானவன். அது குங்கனின் குணம். ஆனால் அதேசமயம் பிரதிவிந்தியன் சஞ்சலம் கொண்டவன். எரிச்சல் கொண்டவன். சதிகள் புரியாத அப்பாவி. அது இளவர்சனாகிய யுதிஷ்டிரனின் குணம். இருவருமே யுதிஷ்டிரனில்உள்ள இரண்டு இயல்புகளை சரியாக பிரதிபலிக்கிறார்கள்.


சாரங்கன்