Sunday, November 26, 2017

கொண்டாட்டங்கள்.




ஜெ,

பொதுவாக இத்தகைய பெரிய நாவல்களில் சிலபகுதிகள் நமக்குத்தேவையில்லாமல் விரிவதுபோலத் தோன்றும். அஸ்தினபுரியின் காட்சிகள் அப்படி விரிந்துசெல்கின்றன என நினைத்தேன். நிறைய அரசாங்க முறைமைகள். கொண்டாட்டங்கள். கட்டித்தழுவல்கள். அப்படியே செல்கிறது. 

ஆனால் பின்னர் யோசித்தபோது அவையெல்லாம் பாண்டவர்களின் மைந்தர்களால் காணப்படுகின்றன என்பதை எண்ணிக்கொண்டேன். அவர்கள் எவருக்கும் இதெல்லாம் முன்னர் தெரியாது. அவர்கள் வளரும்போதே நாடிழந்துவிட்டார்கள். உறவு, அரசப்பதவி இரண்டையும் ‘கடைசியாக’ அனுபவிக்கிறார்கள். 

போரும் அமைதியும் நவாலில் விருந்துகள், வேட்டைகள் விரிவாகச் சொல்லப்படும். ஆனால் மெல்லமெல்ல போர் வந்து அவையெல்லாம் அழியும். அதன்பின்னர்தான் அந்த விவரணைகள் எல்லாம் அழிந்துபோன பழைய மாஸ்கோவின் அடையாளங்களாக நின்றுவிடுவதை நாம் உணர்வோம்.


ராஜ்