Monday, November 27, 2017

ராதையும் அர்ஜுனனும்



எப்பொழுதும் ராதை என உணர்ந்த நெஞ்சம் இப்பொழுதெல்லாம் பார்த்தனெனவே உணர்ந்து கொள்கிறது.  இது மெய்மை தேடலில் நான் அடையும் முதிர்வென்று தருக்கிவிட்டோனோ என்றும் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இல்லை. தானே  மூலப்பிரஹ்ருதியாகவும் பரமாணுவாகவும் திகழும் இப்பிரஞ்ச வீதியில் மயக்கம் தீர்ந்த அனைவரும் உணரக் கூடிய உண்மை இவை என்றே உணர்ந்து கொள்கிறேன்.

என்றேனும் சந்தர்ப்பம் வாய்த்தால் இருமையாக நின்றிருக்கும் இவர்கள் இருவர் குறித்தும் இன்னும் உரையாடி  விரித்துக் கொள்ளும் விழைவு உள்ளது.   


கிருத்திகா

ராதைக்கு எந்த சிரமமும் இல்லை, இயல்பாகவே அங்கிருந்தாள்
அர்ஜுனன் நம்மைப்போல. அல்லற்பட்டு அலைக்கழிந்து அங்கே சென்று நிலைகொள்ளவேண்டியவன்
ஜெ