Sunday, November 19, 2017

நெறியமைப்பவன்



அன்புள்ள ஜெ

ஓர் உச்சநிலைக்குப்பின்னர் மிக இயல்பாக அடுத்த அத்தியாயம் ஆரம்பிக்கிறது. அதில் நடக்கும் நீதிவிவாதம் இயல்பாக ஒரு அத்தியாய வளர்ச்சிக்காக என்று தோன்றினாலும் ஆழமானது. அது முன்வைக்கும் கேள்விகள் இரண்டு

ஒன்று அரசாங்கம் ஒரு சமூகத்தை ‘செயல்பட வைக்கலாமா கூடாதா? அரசாங்கம் அதை நிர்வாகம் மட்டும்தான் செய்யவேண்டும். காவலும் கண்காணிப்பும் மட்டும்தான் அதன் வேலை. அதை உண்டுபண்ணுவதோ மாற்றியமைப்பதோ அதன் ஃப்ளோவில் தலையிடுவதோ அல்ல என்பது தான் பழைய முறை. அரசன் அறத்துக்கு கட்டுப்பட்டவன். அரசும் குடிமக்களும் எல்லாருமே அறத்திற்குள் இருப்பவர்கள். அரசன் அறத்தை கட்டுப்படுத்தவோ மாற்றவோ கூடாது. ஆகவே அவன் வழ்க்கைகளில் தலையிடக்கூடாது

இன்னொன்று ஒரு நீதியை மக்கல் ஏற்றுக்கொள்வார்களா? மாட்டார்கள். ஒருவன் எந்த நீதியில் பிறந்து வளர்ந்தானோ அதைத்தான் கடைப்பிடிப்பான். அவன் கற்றுக்கொண்டது அவனைக் கட்டுப்படுத்தாது. ஆகவே ஒரு புதிய நீதிநெறியை கொண்டுவர ஒரு புதிய சமூகத்தை ஆக்கியே ஆகவேண்டும். அதைத்தன கிருஷ்ணன் செய்கிறான்


எஸ். ஆர்.சீனிவாசன்