Sunday, November 26, 2017

பீமன் மீண்டும்



அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஜெ

பீமன் மீண்டும் அவைபுகுந்து எது நடைமுறை லாஜிக்கோ அதைச் சொல்கிறான்.வெண்முரசு ஆரம்பம் முதலே பீமனின் கதைபாத்திரம் இந்த குணாதிசயத்துடன்தான் இருக்கிறது. முந்தைய நாள் தர்மன் எல்லாவற்றையும் மறந்து அஸ்தினபுரிக்கு சென்றிருக்கவேண்டும் என்ற எண்ணம்தான் வந்தது. ஆனால் பீமன் பேசிக்கேட்டதுமே அது தவறானதோ என்ற எண்ணம் வந்துவிட்டது. அது கடைசியில் இவங்கள்லாம் ஒண்ணுதாம்பா என்ற எண்ணத்தைத்தான் உண்டுபண்ணும் என்று சொல்வது சரி. கடைசியில் அது நடக்கவும் நடந்தது இல்லையா? கௌரவர்களுக்கும் சேர்த்து தர்மன் தான் தர்ப்பணம் செய்தான் . வென்முரசில் இப்படி எல்லாகோணமும் சரியாகச் சொல்லப்பட்டிருப்பதே முக்கியமானது என நினைக்கிறேன்

சக்தி கணேஷ்