Monday, November 20, 2017

மீண்டும் பீமன்



அன்புள்ள ஜெ

பிரதிவிந்தியனுக்கும் சர்வதனுக்குமனா உரையாடல் புன்னகையை உண்டுபண்ணியது. மிக நுட்பமான சீண்டல். அதே போன்ற உரையாடல்தான் யுதிஷ்டிரனுக்கும் பீமனுக்கும் நடந்துகொண்டிருக்கும். குறிப்பாக பிரயாகையில் பல இடங்களில் அற்புதமான அங்கதங்கள் உண்டு. அந்தக்குரங்குகளும் ஞாபகம் வருகின்றன. அந்த சித்திரத்தை வெண்முரசில் மீண்டும் கண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இதுதான் உலகம். மீண்டும் மீண்டும் வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது. மாறாமல் மீண்டும் மீண்டும் ஒன்றையேதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்


செல்வராஜ்