Saturday, November 25, 2017

ஆதிகவித்துவம்



ஜெ

புராணங்களுக்கு ஒரு வழிமுறை உண்டு. இங்கே இகத்தில் உள்ள ஒவ்வொன்றும் பரத்தில் உள்ள ஒரு கருத்தின் பொருள்வடிவம்தான் என்பது அது. அது ஒரு வேதாந்த ஞானம். அந்தக் கருத்து வெவ்வேறு பொருள்களில் வெளிப்படுகிறது. அந்த உணர்வை அவை வெளிப்படுத்தும் ஒருமுறை உண்டு. கீதையிலேகூட அது வருகிறது.

துருவனைப் பற்றிச் சொல்லும்போது  துருவன் எண்களில் சுழி. சொற்களில் அகரம். ஒலிகளில் ஓங்காரம். எண்ணங்களில் தன்னுணர்வு என்கிறார் குரு. அதாவது நிலைபெயராமை என்பதன் வடிவங்கள் இவை. அதேபோல குதிரையைப்பற்றி சொல்லும்போது நகுலன் விலங்குகளில் அனல் . படைக்கலங்களில் அவை அம்பு. மலர்களில் அவை காந்தள். தெய்வங்களில் அவை இந்திரன் என்கிறான். விசை என்றோ ஓளி என்றோ அதைச் சொல்லலாம். இந்த ஆதியான கவித்துவம் வெண்முரசின் அழகுகளில் ஒன்று


நடராஜன்