Tuesday, November 28, 2017

கலப்பை



ஜெ
ஒவ்வொருவர் பேசும்போதும் இவர் சொல்வதுதான் சரிபோல என்று தோன்றும்படி எழுதுகிறீர்கள். நான் அக்ரூரர் பேசும்போது சரிதானே என உண்மையாகவே நினைத்தேன். அக்ரூரர் சொல்வதைத்தான் எந்த நல்ல அமைச்சரும் சொல்லவேண்டும். சக்கராயுதத்தால் கிருஷ்ணர் யாதவர்களை அழித்தாரென்றால் அதற்கும் கம்சருக்கும் என்னதான் வேறுபாடு என அவர் கேட்பது ஆழமான கேள்வி

அதற்கு அர்ஜுனன் சொல்லும் பதிலும் ஆழமானது. பெரியவேறுபாடேதும் இல்லை. கலப்பையும் பல்லாயிரம் உயிர்களை அழிக்கும் படைக்கருவிதான். விளைவதென்ன என்பதே முக்கியம். இன்றுவரை உலகை மீட்கவும் மாற்றவும் வந்த கொள்கைகள் உருவாக்கிய மானுட அழிவுதானே அதிகம்? நான் கல்லூரியிலே வாசிக்கும்போது ஆசிரியர் சொன்னார். ஜனநாயகத்துக்காகத்தான் அதிகமான மனிதர்கள் செத்திருக்கிறார்கள். அதைத்தான் இப்போது நினைத்துக்கொண்டேன்


சாந்தா