Tuesday, November 28, 2017

இளையவன்



அன்புள்ள ஜெ

உபபாண்டவர்களின் கதாபாத்திரங்களில் இனிமேல் என்ன வரமுடியும் என நினைத்திருந்தேன். ஒன்பதுபேரும் ஒன்பது குணங்கள் கொண்டிருக்கிறார்கள். அபிமன்யூவின் மூர்க்கம் கொஞ்சம்கூட பிறரிடம் இல்லை என்பதும் காட்டப்படுகிறது. அவனிடமிருக்கும் விளையாட்டுத்தனம்கூட எவரிடமும் இல்லை. அவர்களில் இளையவன் நிர்மித்ரன். அவன் ஒரு பையனாகவே தெரிகிறான். மதுராவின் சபையில் அவன் கொள்ளும் பரபரப்பும் புத்திசாலித்தனமும் சின்னப்பிளைத்தனமும் கலந்து அவன் அச்சபையைப்பார்க்கும் பார்வையும் அற்புதமானவை.


ஜெயராமன்