Wednesday, November 29, 2017

யோகி


ஜெ

அர்ஜுனன் மிக எளிதாக நினைத்ததை சாதித்துவிட்டான் அவன் எதையும் திட்டமிடுவதில்லை. முன்னரே நினைத்து நினைத்து பார்ப்பதுமில்லை. மனதை காலியாக வைத்திருக்கிறான். ஆனால் குறிதவறுவதில்லை
உபகௌரவர்கள் எல்லாருமே மிகமிகப்புத்திசாலிகள். மிகக்கூர்மையாகத்திட்டமிடுகிறார்கள். தெளிவாக யோசித்துச்செய்கிறார்கள். சிறந்த சொல்லாட்சி உள்ளது. 

ஆனால் அவர்கள் எவருமே நினைத்தவை நடக்கவில்லை. அதேசமயம் யோசிக்காமல் அம்புவிட்ட அர்ஜுனனின் ஒரு இலக்குகூட தவறவில்லை. இந்த வேறுபாட்டை எண்ணிக்கொண்டிருக்கிறேன்

திறமை என்பது எய்துவதுதான் என்றால் அர்ஜுனன் மட்டுமே விழியினால் விளக்குவோன் ஆக உள்ளான். அது யோகத்தால் வந்தது. பயிற்சியால் அல்ல என நினைக்கிறேன்


சுந்தரம் செல்லப்பா