Saturday, November 25, 2017

கடைசிக் களியாட்டு



அன்புள்ள ஜெ

இந்திரனின் முன்னால் நிகழும் அந்தக்களியாட்டை வாசிக்கும்போது வெண்முரசில் வரும் கடைசிக் களியாட்டுதானா இது என்ற எண்ணம் வந்தது. பாண்டவர்களின் மைந்தர்களும் துரியோதனனின் மைந்தர்களும் சேர்ந்து அதைக் கொண்டாடுகிறார்கள். சென்ற சில அத்தியாயங்களாகவே வெண்முரசில் ஒருபக்கம் போருக்கான முஸ்தீபுகள் நிகழ்கின்றன. இன்னொரு பக்கம் குலமரியாதைகளும் கொண்டாட்டங்களும் நெகிழ்ச்சியான அன்பும் வருகின்றன. இரண்டும் இரண்டு சரடுகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றன. ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிரிந்தும் செல்கின்றன. இரண்டு அம்சங்களாலானதுதான் மகாபராதம் என நினைக்கிறேன். அங்கே மிகப்பெரிய பகைமையும் இருந்தது. குடிப்பிறப்பின் மரபுகளு இருந்தது. ஆனாலும் உபகௌரவர்களையும் உபபாண்டவர்களையும் சேர்ந்துவிளையாடுவதாகப்பார்ப்பது நெஞ்சை கரையச்செய்வதாக உள்ளது.


அருண்