Wednesday, November 29, 2017

வினைமுடிப்பவன்



அன்புள்ள ஜெ

கிளம்பும்போது சகதேவன் மகனிடம் சொல்கிறான். மதுராவில் கௌரவர்களுடன் கூட்டு வைப்பதைப்பற்றி இயல்பாக இருந்தார்கள் என்றால் அந்தக்கூட்டு உறுதியானது. அவர்கள் ஆவேசமாக அதை ஆதரித்துப்பேசினார்கள் என்றால் அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் விலகி வருவார்கள் என்று. என்ன ஒரு மதிநுட்பம். நடைமுறை உண்மை அது


ஜெகதீஷ்