Thursday, November 30, 2017

அன்னையருக்குரிய தெளிவு



நாம் பிளவுற்று மடிவது ஊழ் எனில் அவனும் அதை தடுக்கமுடியாது. என் மைந்தன் அப்பழி கொள்ளவேண்டாம் என்று மட்டுமே சொல்லவந்தேன் – என்று தேவகி சொல்லும் இடத்தை வாசித்தபோது என்ன ஒரு தெளிவு என்னும் எண்ணம் வந்தது. அன்னையருக்குரிய தெளிவு அது. கிருஷ்ணன் மகாபாரத யுத்ததில் ஆயுதமெடுத்திருந்தால் என்ன ஆகும் என்று எண்ணும்போதுதான் அவள் சொன்னதன் அர்த்தமே புரிகிறது


சித்ரா