Wednesday, November 29, 2017

பேரன்னை




ஜெ

ஒவ்வொருவரின் ஆளுமையும் திரண்டு வரும் வெண்முரசில் ஆர்க்கிடைப் போல மாறாத அடையாளத்துடன் இருக்கும் சிலர் உண்டு. ராதை ஒருத்தி. தேவகி யசோதை போன்றவர்கள் மேலும் சிலர். தேவகி பேரன்னையாக கிளம்பிவந்து கிருஷ்ணனுக்கு ஆணைகளிட்டு அனைத்தையும் தலைகீழாக்கும் காட்சியை அதனால் மிகவும் ரசித்தேன்.

யாதவகுலப்பெண்கள் மிக வலிமையனவர்கள். அவர்கள் தாய்வழிச்சமூகம். ஆகவே அவள் சொல் மீறப்படமுடியாதது. அவள் உள்ளே வரவே இல்லை. ஆகவே உள்ளே இருக்கும் அத்தனைபேரும் மறந்துபோன அறங்களை எல்லாம் அவளால் ஞாபகப்படுத்திக்கொடுக்க முடிகிறது என நினைக்கிறேன்


சுப்ரமணியம்