Monday, November 27, 2017

வெறும் கனவு



அன்புள்ள ஜெ

இன்றைய அத்தியாயத்தில் அர்ஜுனனின் சொற்கள் ஒரு டிரான்ஸ் நிலையில் இருந்து வெளிவந்தன. ஆமாம் அவர் சொல் வெல்லும் என்று அவன் சொல்லும்போது அது வென்ற வரலாற்றுக்குப்பின்னால் நின்று பார்க்கும் நமக்கு அது ஒரு உண்மை என்றே தோன்றுகிறது. அன்றிருப்பவர்களுக்கு அது ஒரு வெறும் கனவு என்றுதான் தோன்றியிருக்கும். அந்தக்கனவை நம்பி நம் குலத்தை அடகுவைக்கவேண்டுமா என்று அக்ரூரர் கேட்பது ஒரு குலத்தலைவர் என்றவகையில் அவருடைய இயல்புக்கு உகந்ததேயாகும்


சரவணன்