Tuesday, November 28, 2017

உள்விளையாட்டு



அன்புள்ள ஜெ

ஒருபக்கம் உபபாண்டவர்களின் குணச்சித்திரம் விரிந்துகொண்டே வருகிறது. மறுபக்கம் அவர்களின் பார்வை வழியாகவே மகாபாரதப்போருக்கான முஸ்திபுகள் வெளிவருகின்றன. மகாபாரதப்போருக்கான மையம் கிருஷ்ணன்/ ஆகவே கிருஷ்ணனின் குலத்தில் என்ன நிகழ்கிறதென்பது முக்கியம். 

ஆனால் மகாபாரதத்தின் கட்டமைப்பில் இது நேரடியாக வரவில்லை. மௌசாலபர்வத்தில் தனியாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது இடைச்செருகல் என்றும் ஒரு தரப்பு உண்டு இருக்கலாம். 

ஆனால் இங்கே கிருஷ்ணனின் குடும்பத்தின் அழிவை நுட்பமான உள்விளையாட்டுக்களின் வழியாகச் சொல்லிச்செல்கிறீர்கள். இது மகாபாரதப்போரை ஒரு பங்காளிச்சண்டையாகச் சுருக்கிப்புரிந்துகொள்வதற்கு எதிரான ஒரு பெரிய விவரிப்பாக அமைந்துள்ளது


சாரங்கன்