Thursday, January 25, 2018

துச்சளை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

துச்சளை அன்புமிகுந்தவளாக,  அகந்தை  அற்றவளாக,  பேரன்னையாக  மனம் கவர்கிறாள்.   கீழ்மையின்  உச்சமான  சாதிவெறியும் அற்பத்தனமான  தன்னகந்தையும்  கொண்டவர்களாக கரேணுமதியும் பிந்துமதியும்  கடந்து சென்றபின்  நல்லியல்பினளான  துச்சளையைக்காண்பது உவகை அளிக்கிறது.  காண்போர் விழி  விலக்காது காண  விழையும் திருமுகம் கொண்ட  அன்னை  என்பது மகிழ்ச்சி

அன்பும்  அருளுணர்வும்  உள்ளோர் அனைவரும்  ஊழின் காரணமாக  எத்தரப்பில் நின்றாலும்  உள்ளத்தால்  அவன் தரப்பே நிற்கின்றனர்.    தானெனும் ஆணவ  மிகலும்  குல உயர்ச்சி எண்ணங்களும்  சிறுமைகளும் அ வர்களிடம் இல்லை.


அன்புடன்
விக்ரம்
கோவை