Monday, January 22, 2018

தொடக்கம்



அன்புள்ள ஜெ

பீஷ்மரிலிருந்துதான் எல்லாமே தொடக்கம் என்று வாசகர் ஒருவர் எழுதியிருந்த குறிப்பை வாசித்ததும் எனக்கு முதற்கனல் நினைவுக்கு வந்தது. இதே வரியை அன்றைக்கு ஒரு சூதர் ஒரு சத்திரத்திலே சொல்கிறார். அதைக்கேட்டு அவருடைய காலடியிலே பொன்னை அள்ளி வைத்துவிட்டு பீஷ்மர் கிளம்பிச்செல்கிறார். அந்தப்புள்ளியில் இருந்து இன்றுவரை பீஷ்மரின் வேலை என்பது அந்தப்பழியை தவிர்க்க முயல்வதாகவே இருக்கிறது. அது என்ன செய்தாலும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்ததும் அவர் களமிறங்கிவிட்டார். சாக  தயாராகிவிட்டார்


மகேஷ்