Tuesday, January 23, 2018

நக்னை



ஜெ

பிந்துமதி பீமனிடம் அஸ்தினபுரியின் சாளரத்தைப்பற்றியும் அங்கே அமார்ந்து செத்துப்போன அரசியரைப்பற்றியும் சொல்கிறாள். ஆனால் அப்போது அவளுக்கு மிக அருகே நக்னை என்ற தெய்வம் நின்று கொண்டிருக்கிறது. ஆடைகழற்றி நிர்வாணமாக்கும் தெய்வம் அது. அவர்களுக்கும் அந்த தலைவிதிதான். ஆனால் அவர்கள் அதை அறியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு பரிதாபம். எங்கோ காட்டிலிருந்து கிளம்பிய ஒரு தெய்வம் மூன்று தலைமுறைகளாக பலிகொண்டுகொண்டே இருக்கிறது


மகாதேவன்