Tuesday, January 9, 2018

பெருங்காதல்



ஜெ

வெண்முரசில் அத்தனைபேருக்கும் அவர்களுக்கான சுயநலம் தவிர்த்த நியாயங்கள் இருந்தன. குந்தி மட்டுமே வெறும் id  மற்றும் will கலவை என்று இதுவரை வந்துகொண்டிருந்தது. சரிதான், அதுவும் இருக்கலாமே என்று நானும் நினைத்துக்கொண்டிருந்தேன். இப்போது குந்தியின் மனநிலையை வாசிக்கையில் அற்புதமான ஒரு மனநிலை வாய்த்தது. குந்தி அவள் அளவிலே ஒரு பெரும்பத்தினி. ஆண்மையற்றவன் என்பதனாலேயே தன் கணவன் சுவடற்றுப்போய்விடுவான் என அஞ்சுபவள். ஆகவே அவனுடைய ரத்தத்தை அரியணை அமர்த்திவிடவேண்டும் என வெறிகொண்டிருக்கிறாள். அவளுக்கு அந்த இலக்கு தவிர வேறு ஏதும் முக்கியம் அல்ல. அதனால் அழிவுகள் உருவாகின்றன என்பது உண்மைதான். ஆனால் அவளுடைய அந்தப்பெருங்காதலை நினைக்கையில் அது நியாயப்படுத்தப்படவேண்டியதென்றே தோன்றுகிறது.


ஜெயராமன்