Thursday, January 18, 2018

பிந்துமதியும் கரேணுமதியும்


ஜெ

இன்றைய அத்தியாயத்தில் பிந்துமதியும் கரேணுமதியும் இதுவரை வந்தப் பெண்களில் முற்றிலும் சம்பந்தமே இல்லாத குணாதிசயங்களுடன் இருக்கிறார்கள். கீழ்மைதான் அவர்களின் இயல்பாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் ஏதோ மனப்பொருமலில் இருப்பதும் அதை வளர்த்துக்கொண்டு அவ்வாறு ஆகிவிட்டிருப்பதும் தெரிகிறது. அவர்களின் தமையன் சிசுபாலன் கிருஷ்ணனால் கொல்லப்பட்டிருக்கிறான். அது காரனமாக இருக்கலாம். அல்லது வலுக்கட்டாயமாகக் கவர்ந்துவரப்பட்டமையாலாக இருக்கலாம். அனால் அவர்களின் மனநிலை வருத்தமளிப்பதாக உள்ளது. அவர்களின் நடத்தை வழியாகவே அவர்களின் கதாபாத்திரத்தை நேரடியாகக் காணமுடிகிறது


ரவிச்சந்திரன்