Sunday, January 28, 2018

தாரையின் விலகல்



அன்புள்ள ஜெ,

ஒரு இறுக்கமான சூழலில், அதனை விட்டு விலகி நிற்பவர்களால் சூழலை நன்றாகப் புரிந்து கொள்ள முடிவதோடு எளிதாக முடிவுகளை எடுக்க முடிகிறது. இந்த விலக்கம் தாரைக்கு, சிறு பிள்ளைகளுக்குரிய விளையாட்டு மனோபாவத்தால் இயல்பாக வருகிறது. கால்களால் காடறியும் மானாகவே எப்போதும் துள்ளுகிறாள். இனிப்பை ஆடையில் மறைத்து அவைக்கு எடுத்துச் செல்கிறாள். துச்சளை தன் வாழ்வின் எடை மிக்க ஒரு கணத்தைச் சந்திக்க, ஒரு சாகசப் பயணத்தின் வழியே அவளை அழைத்துச் செல்கிறாள். 

இந்தச் சுரங்கப்பாதைப் பயணத்தைப் படிக்கும்போது ஆலிஸின் அற்புத உலக சாகசங்கள் நினைவுக்கு வந்தது. சலிப்பூட்டும் அரண்மனை அன்றாட வாழ்வில் இருந்து சுரங்கத்தின் வழியே தனக்கான காட்டில் எழும் பெண்.

அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை