Sunday, January 21, 2018

கலி




அன்புள்ள ஜெ

கலியை முன்னரே நளன் கதையிலே அறிமுகம் செய்துவிட்டீர்கள். இப்போது அவர் மேலும் வீரியத்துடன் கதைக்குள் வருகிறார். நினைத்தை கொடுக்கும் தெய்வம் கலி. ஆனால் ஒரு அணு நாம் சொல் மாறினால் நம்மை அழித்தே விடுவான். அந்தக்கலியின் மகனாகவே துரியன் பிறந்தான். அதை அவனிடமிருந்து மறைக்கவே அதுவரை திருதரச்திரர் முயன்றார். இப்போது அவனே தேடிப்போய் அதன் காலடியில் தன்னை சமர்ப்பணம் செய்கிறான்

இந்நாவல் களில் பல இடங்களில் துரியன் கலியிடம் சென்றிருக்கிறான். சென்று சென்று மீண்டு வருகிறான். இது கடைசியாகச் செல்வது. இனி மீட்சியே இல்லை என நினைக்கிறேன்

சண்முகம்