Monday, January 22, 2018

பெண்கள்



அன்புள்ள ஜெ,

பிந்துமதியும் கரேணுமதியும் பாண்டவர்களால் கவர்ந்து வரப்பட்டவர்கள். அவர்கள் மணந்துகொள்ள விரும்பியது ஜெயத்ரதனை. ஆகவே அந்தக்கசப்பிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். அதோடு அவர்களுக்கு மணவாழ்க்கையே அமையவில்லை. மணமான சில ஆண்டுகளில்யே அவர்களை பிரிந்து பாண்டவர்கள் காட்டுக்குச் சென்றுவிட்டார்கள். அந்தக்கசப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஆகவே அவர்கலின் மனநிலையைப்புரிந்துகொள்ள முடிகிறது

அதோடு அவர்களை பீமன் உடைக்கும் விதமும் குரூரமானது. ஆனால் ஏற்கனவே அதையே அவன் கர்ணனுக்கும் செய்திருக்கிறான். நாசூக்கோ அடுத்தவர்களைப்புரிந்துகொள்ளும் நுணுக்கமோ இல்லாதவனாகவே ஆரம்பம் முதல் பீமன் இருக்கிறான்


மகேஷ்