Thursday, January 25, 2018

தொடுகை



அன்புள்ள ஜெ ,


பின்தொடரும் நிழலின்  குரல் நாவலில் அருணாச்சலத்திற்கு  அவர் குரு எழுதும் கடிதத்தில் சொல்வார் '  உன் பெண் பிள்ளை கூட நேரம் செலவளி , குழந்தையாக  (  சிறுமியாக  )  இருக்கும் போதுதான் எடுத்து கொஞ்ச முடியும் , வளர்ந்து விட்டால்
பின் முடியாது '  என்பது போல . திருதிராஷ்டிரர்  துச்சளையை கைகளால் வருடி  அறிந்தபோது , அனைத்தபோது அதிர்ந்தேன்  , காமமெல்லாம்  முற்றழிந்த  ஒருவரால்தான்  தன் வளர்ந்த மகளை குழந்தையாக எடுத்து கொஞ்ச முடியும் ,வருட முடியும் என்று நினைத்தேன் .


கண்ணில்லாத  மண்புழு  என்பது மிக பொருந்தி வந்தது , அவர் எப்படியாவது முட்டிமோதி யார் காலிலாவது  விழுந்து ,தன் மகன் மூலம் தன்னை நீட்டிக்க  விரும்புகிறார் . பிறந்த குழந்தையின் குணம் இது , வாய்க்கு  அகப்பட்டதையெல்லாம் உண்ண முனையும் ஆற்றல்  , இறப்பிற்கு  எதிராகதான் அந்த ஆற்றல் மனிதனுள்  திரும்ப வருகிறது என நினைக்கிறேன் .


ராதாகிருஷ்ணன்