Wednesday, January 31, 2018

பூடகத்தன்மை



அன்புள்ள ஜெ

பானுமதிக்கும் கிருஷ்ணனுக்குமான அந்தரங்க உறவு அந்தப்பூடகத்தன்மை விலகாமலேயே சொல்லப்படுகிறது. எதனால் அவள் கிருஷ்ணனை வரவேற்கப்போகத் தயங்கினாள். ஏன் அது சூழ்ச்சி என சந்தேகப்பட்டாள். ஏன் அவள் அவன் முன் அழுதாள்? அசலையும் தாரையும் பானுமதியும் எல்லாம் ஒரே மனநிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒன்று பானுமதியிடம் மிஞ்சியும் இருக்கிறது.

பலமுறை வாசித்தும்கூட அதற்குள் செல்லமுடியவில்லை. அந்த மர்மத்தைச் சுற்றியே அந்த அத்தியாயங்கள் செல்கின்றன. சொல்லாமலும் கொஞ்சம் சொல்லியும். அதுதான் முக்கியம். ஆகவே அதற்குள் நடக்கும் மற்ற உரையாடல்கள் எல்லாமே எளிதானதாக உள்ளன. அவர்கள் பேசிக்கொள்ள விரும்புவது அது அல்ல என தெரிகிறது. பானுமதியை அவ்வலவு அணுக்கமாக உணர்ந்ததே இல்லை


மனோ