Tuesday, January 23, 2018

தேர்



அன்புள்ள ஜெ ,


தேர் வடத்தை  பற்றி இழுத்து செல்வது போல , மிகசிலர் தவிர  இங்குள்ள  ஒவ்வொருவரும் போரை  நோக்கி சூழலை நகர்த்துகின்றனர்  ,  தனக்கான காரணத்தை கொண்டு ..
தன்முனைப்பு  மனநிலை தானில்லாத  ஒன்றை அழிக்கவே விரும்பும் , கரேணுமதியும் ,பிந்துமதியும்  விரும்புவது  அதுவே , தன்னை கைகொள்ளாத கணவனின் அழிவை  , கணவனின்  சொந்தங்களின்  அழிவை ..


ஆடைகள்  களைந்து திரியும்  நக்னை  போல , உறவுகளை   களைந்து நிற்க ..
பீமன் 'நீ  நிஷாதி' என சொல்வது  'நீ நக்னை' என்று சொல்வது போல ,
அதிலிருந்து விலகதான்  இந்த இரு பெண்களும் தங்களை தொடர்ந்து சத்திரிய  பெண்களாக சொல்லி கொண்டிருந்தாள்கள்  போல ,இந்த சத்ரியகுமிழி உடைந்ததுதான் பிந்துமதி கிளம்ப  எண்ணியதன் காரணம் .


வெண்முரசில் வரும் தோழிகள் , உதவி பெண்கள் பெரும்பாலும்  தன் உள்ளிருக்கும் இன்னொரு முகத்தை காட்டும் ஆடிபாவைகள்  , மாலதி  பிந்துமதியின்  இன்னொரு முகம் , கரேணுபதியின் நிலையை அது விரும்புகிறது  என எண்ணினேன் .

ராதாகிருஷ்ணன்