Monday, January 22, 2018

கேள்விகள்


ஜெ

உச்சகட்ட கோபத்திலும் கசப்பிலும்கூட பிந்துமதியும் கரேணுமதியும் சபையில் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. அவர்கள் ஷத்ரியர்களை மணந்தவர்கல். அந்தப்பதவியை அவர்கள் வேண்டாம் என்று சொன்னால் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதேபோல அஸ்தினபுரியின் உரிமை தர்மருக்கு மட்டும் உள்ளது அல்ல. அதே உரிமை அவர்களின் மக்களுக்கும் உண்டு மகன்களிடம் ஒரு வார்த்தைகூட கேட்கமால் எப்படி அதைக்கைவிட இவர்கள் கோரமுடியும்? அதற்கனா பதிலையே அந்தச்சபையில் எவரும் சொல்லவில்லை. சபையில் பெண்களுக்கு இடமே இல்லை என்பது மறுபடியும் அந்தக்காட்சியில் தெரிகிறது


எஸ்