Monday, January 22, 2018

ஐந்து வீடுகள்



ஜெ

இன்றைய அத்தியாயம் நுட்பமாக மகாபாரதத்தில் உள்ள ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கிறது. மகாபாரதத்தில் ஏன் பாண்டவர்கள் ஐந்து கிராமங்கள் அல்லது ஐந்து வீடுகள் போதும் என்று கேட்டார்கள் என்பதற்கு பதில் இல்லை. ஐந்து வீடுகலைக்கூட கெஞ்சிக்கேட்கும் அளவுக்கா இருந்தார்கல் என்று தோன்றும். அதேபோல அதைக்கூட ஏன் துரியோதனன் கொடுக்க மறுத்தான் என்பதும் குறிப்பிடவேண்டிய கேள்விதான். அதற்கான பதில் இப்போது வருகிறது. அதாவது அப்படி அஸ்தினபுரியில் ஒரு துண்டு நிலத்தைப்பெற்றுக்கொண்டால்மட்டும்தான் அவர்கள் பாண்டவர்கள். இல்லையேல் குலமில்லாதாவார்கள். ஆகவேதான் கேட்கிறார்கள். ஆகவேதான் அதை மறுக்கிரார்கள்


ஆனந்த்