Friday, July 6, 2018

அன்னை



ஜெ

காந்தாரியின் மடியில் குண்டாசி தலைவைத்துக் கிடக்கும் காட்சி, அவன் அடையும் இனிமை சமீபத்தில் வெண்முரசில் வந்த அரிய காட்சிகளில் ஒன்று ஏனென்றே தெரியவில்லை. ஆனால் அற்புதமான ஒரு நெகிழ்வு அந்தக்காட்சியில் இருந்தது.

குண்டாசி தூக்குங்கள் மூத்தவரே என்று பீமனிடம் சொன்னபடி அறிமுகமாகும் காட்சியை நினைவிலிருந்து எடுக்கமுடிகிறது. இப்போது அவன் சடலம்போலவே ஆகிவிட்டான். அவனிடம் எஞ்சியிருப்பது ஒரு வன்மம் மட்டும்தான்.

ஆனால் அனைத்தையும் விட்டுவிட்டு அவன் அன்னைமடியில் படுத்துக்கொள்கிறான். அன்னைக்கு அவன் இன்னமும் மகனாகவே தெரிகிறான்

அற்புதமான ஒரு காலைநேரமாக அமைந்தது


எஸ்.ஆர்.மகாலிங்கம்