Saturday, July 7, 2018

குண்டாசியின் துயரம்



அன்பு ஜெமோ சார்,
                                 

 குண்டாசி காந்தார அன்னையரனைவருக்குமே சம்படையை நினைவுறுத்துபவன்.  காந்தார சகோதரிகளில் சம்படை.... அஸ்தினபுரியில்  இயல்பு வாழ்க்கை 
 வாழவே இயலாமல் சகுனியிடம் காந்தாரத்திற்குச் செல்ல இறைஞ்சியவள்; பெருந்துயர் சாளரத்தினுள் தஞ்சமானவள்; இளையயாதவனுடனான  உரையாடலுக்குப் பின் மரண மீட்பு பெற்றவள்.   அவள் பெற்ற குண்டாசி கெளரவ நூற்றுவரில் தனியன், தனித்துழலும்   அவனின் தத்தளிப்பு வெண்முரசில் தனிக் குறுநாவல்.

இரா.சிவமீனாட்சிசெல்லையா.