Sunday, July 3, 2016

ஆயிரம் கைகள்



 

ஜெ, 

 

பாஞ்சாலி சபதம் பல நூல்களை நுட்பமாக நினைவுபடுத்தியபடி விரிந்தது ஒரு பெரிய அனுபவம். ஆனால் இதுவரை வாசித்த நுல்கள் எல்லாமே அதை ஒரு பெண்ணின் சபதம் என்றோ சரணாகதி என்றோதான் விளக்கிக்கொண்டிருந்தன. நீங்கள் அதை மேலும் பெரிய ஒரு களத்திலே வைக்கிறீர்கள். தனித்த மனிதர்களுக்கு அப்பாற்பட்ட அரசநீதியும் அதைப்பேணும் வேதமும்தான் பாஞ்சாலிக்கு அநீதியிழைத்தன. ஒரு தனிமனிதனுக்ககாவும் இறங்கிவரும் ஒரு புதிய நீதிக்காகவும் அதற்குரிய வேதத்துக்காகவும் அவள் கிருஷ்ணனை அழைக்கிறாள். ஆயிரம் கைகள் வழியாக அவன் கை நீண்டு வருகிறது. அற்புதம்

சாரங்கன்