Sunday, July 3, 2016

பெண்பழி



 

ஜெ

 

பன்னிருபடைக்களம் நாவலில் முக்கியமான வரி ‘பெண்பழி செய்தவர்கள் பிள்ளைத்துயர் கொண்டு அழியவேண்டும் என்பதே பெருநெறி’ என்பது. பலமுறை நான் அவ்வரிகளைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். மகாபாரதத்தின் லௌகீகமான அர்த்ததையே அந்த வரி சொல்லிவிட்டது. கௌரவர் பாண்டவர் இருசாராருமே பெண்பழிகொண்டவர்கள்தான். பிள்ளைக்கலியால் அழிந்தனர். பீமன் தங்களுக்கே விட்டுக்கொண்ட உக்கிரமான சாபம் அல்லவா அது?

மனோகரன்