Sunday, July 3, 2016

கடவுள்



ஜெமோ, 

 

ஒரு கதை. கடவுளைச்சந்தித்தபோது ஒருவன் கேட்டான். நான் துயரத்தில் இருக்கும்போது நீ வாவில்லை. ஆபத்தில் இருக்கும்போதும் நீ உதவிக்கு வரவில்லை. மனிதர்கள்தான் எனக்கு உதவினார்கள். அப்படியென்றால் நீ எதற்கு?

 

 கடவுள் சொன்னார். நான் சொற்கத்திலே ரொம்ப தொலைவிலே இருக்கிறேன். ஆகவே உனக்கு பக்கத்திலே இருக்கும் கைகளை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். 

 

கிருஷ்ணனின் விஸ்வரூபம் அந்த அரண்மனைப்பெண்களின் உள்ளத்திலே அவன் எழுந்த விதம்தான் ஆச்சரியம், அவர்களை அறிமுகம் செய்யும்போதே இதையெல்லாம் போட்டு வைத்திருக்கிறீர்கள். இந்த கிராண்ட் பிளான் தான் வெண்முரசின் முதன்மையான சிறப்பு

 

சாமிநாதன்