Wednesday, January 3, 2018

பெண்களின் கண்கள்


அன்புள்ள ஜெ

பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரர் என்று ஒவ்வொருவரும் ஒருவகை தர்மசங்கடத்தின் உச்சத்திலே இருந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லை. அவர்களுக்கும் இருநிலைகள் உள்ளன. ஆனால் அதிலொன்றில் நிலைகொள்வதைப்பற்றிய தயக்கங்களேதும் அவர்களிடமிருக்கவில்லை. தான் ஒரு அன்னை என்ற நிலையில் எந்தக்குழப்பமும் இல்லாமல் முடிவெடுக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான் என நினைக்கிறேன்.

அதிலும் பீஷ்மர் துரோணர் திருதா எல்லாருமே பலவகையான முகமூடிகளும் பாவனைகளும் கொண்டிருக்கிறார்கள். அதை மிக எளிதாகப்பெண்கள் அறிந்தும் வைத்திருக்கிறார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சர்வசாதாரணமாகக் கிழித்தும்போட்டுவிடுகிறார்கள்.


மனோகரன்