Friday, June 1, 2018

போர்




அன்புள்ள ஜெ

ஒருவழியாக மகாபாரதப்போர் வரப்போகிறது. அந்த நினைப்பு வந்ததுமே ஒரு பெரிய சோர்வு. அது வரக்கூடாதென்றே நீங்கள் மிகவும் தயங்கி ஒத்திப்போட்டீர்கள். நாங்களும் போருக்கு முந்தைய அனைத்துக்கதைகளையும் வாசித்து போர் இன்னும் எப்போதோ வரப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்தோம்

ஆனால் நான் இப்போதுள்ள நிகழ்வுகளைப் பார்க்கிறேன். அறிவுஜீவிகளுக்கு ஒரு சமூகம் அமைதியாக இருந்தால் ஒரு நிம்மதியில்லாத தன்மை உருவாகிறது. அன்றாடம் ஏதேனும் கொந்தளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். ஒன்றும் இல்லாவிட்டாலும் கொந்தளிக்கவைக்கிறார்கள். இதுதான் ஒரு உண்மை. அறிவுஜீவிகள் கொந்தளிப்பையும் அழிவையும்தான் விரும்பி உண்டுபணுகிறார்கள். அதுதான் மக்களுக்கும் பிடித்திருக்கிறது.

ஆகவே போர் என்பது அனைவருக்கும் ஆழமாக மனசுக்குள் பிடித்த ஒன்றாகவே இருக்குமென நினைக்கிறேன். நானும் அப்படித்தானா என்று கேட்டுக்கொள்கிறேன்

ரவீந்திரன் நாகராஜன்