Saturday, June 16, 2018

சிகண்டி பற்றி...



சிகண்டியின் கதையை பிற இடங்களில் தேடினேன் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கின்றன !  பொதுவான ஒற்றுமை என்பது பாஞ்சால மன்னன் துருபதனின் மகள் , பின்   ஸ்தூணகர்ணன் வழியாக ஆணாக மாறுகிறாள்  . ஒரு கதையில்  பெற்றோரின்  வருத்தத்தினால்  தற்கொலைக்காக காடேகிய  போது ஸ்தூணகர்ணனின் மாளிகைக்கு  சென்று ஆணாக ஆவது என  , இன்னொன்றில்  மனைவி யின் இகழ்ச்சி  காரணமாக வெளியேறி  மாறியது என  , இன்னொன்றில்  ஒரு கந்தர்வன்  பாலினம் மாறி கொள்ளலாமா  என கேட்டு , கந்தர்வன் பெண்ணாகவும்  சிகண்டி ஆணாகவும்  மாறி கொள்வது என .

சிகண்டி பற்றி ராதாகிருஷ்ணன்