Thursday, June 14, 2018

திரௌபதியின் அறை



எழுத்தாளர் அவர்களுக்கு

பன்னிரு படைகலத்தில் திரௌபதியின் அறை ஒரு mystic ஆன காட்சியாக இருக்கும்.. அனைவர் மத்தியிலும் திரௌபதி வரும் முன் என்ன நடந்தது அந்த அறையில்..? ஏன் மாயை சபதங்களை எடுகின்றாள்.

பின் திரௌபதியின் கதை சீதையின் தீ புகுதலோடு தொடர்பு வைத்து வெண்முரசில் வருகிறது.

தீயினுள் இருந்தது வேறு சீதை அக்னீ பிரவேசத்தில் வெளிப்பட்டது வேறு சீதை.

இன்று மாயை தீ புக வேறு ஒரு திரௌபதி வெளிப்படுகிறாள். அனைவரும் கொந்தளித்து எழுகிறார்கள், வான் மழை பெய்கிறது.

இதற்கெல்லாம் மெல் கிருஷ்ணன் நிலம் நோக்கி இருக்கின்றான். அக்னி பிரவேசத்தின் போது ராமனும் கிருஷ்ணனும் இப்படி இருந்தாக வேண்டும் போல.

இப்படி எல்லாம் நினைக்க தோன்றுகிறது வெண்முரசில்.

நன்றி
வெ. ராகவ்