Friday, June 15, 2018

சுழல்




அன்புள்ள ஜெ

அனலில் தொடங்கி மழையில் முடிகிறது மாயையின் பலிதானச் சடங்கு. அது அம்பையின் பலிதானத்தை பெரும்பாலும் ஞாபகப்படுத்துகிறது. அம்பையும் இதேபோல எரிந்தழிந்தாள். அவளும் இதேபோல ஒற்றை வஞ்சம் உடலில் எரிய உலர்ந்து சுள்ளிபோலிருந்தாள். ஒருபெரிய வட்டம் பூர்த்தியாகிறது. எல்லாமே அதனதன் இடத்தில் வந்து பொருந்தி போர்நோக்கிச் செல்கின்றன

சாரதி