Sunday, June 3, 2018

நீலமும் நடனமும்



ஜெ

நீலம் நாவலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் இந்த சிறிய இடைவெளியில் பரதநாட்டியம்மீது ஆர்வம் கொண்டேன் .சின்ன வயசில் அதை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் அப்போது அதற்கு வீட்டில் சம்மதிக்கவில்லை நாங்கள் விவசாயக்குடும்பம். இப்போது என் மகள் கற்றுக்கொள்கிறாள். வீட்டுக்கு வந்து சொல்லிக்கொடுக்கிறார்கள். கூட அமர்ந்து நான் கற்றுக்கொள்கிறேன். பார்ப்பதற்குத்தான். அதன்பின்னர் நீலத்தை வாசிக்கும்போதுதான் புதிய அர்த்தங்கள் தென்பட்டன. அஷ்டநாயிகா சங்கல்பத்தை ஐந்து நிலங்களின் திணைகளுடன் இணைத்திருப்பதன் அழகை எல்லாம் இப்போதுதான் ரசிக்கிறேன். இதற்கு முன் இத்தனை நுட்பமாக நீலத்தை வாசித்ததில்லை. ராதையின் மனநிலையை நேரடியாக ஒரு தளத்திலும் இந்தமாதிரி நடனம் இலக்கணம் வழியாக இன்னொரு தளத்திலும் சொல்லிச்செல்கிறீர்கள்

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நீலம் நாவலையே ஒரு நீண்ட நடனநாடகம் போல ஆடிவிடலாம் என்று

அகிலா