Thursday, April 30, 2015

பிரம்மாண்டத்தின் இசை






விஸ்வரூபம் என்றால் பிரபஞ்சவடிவம் என்று சாதாரணமாகச் சொல்லலாம். அது பயமுறுத்துகிறது. ஏன் பயமுறுத்துகிறது என்ற கேள்விக்கு அது பயங்கரமானது என்ற பதிலைத்தான் சொல்லமுடியும்/ அதற்கு அப்பால் சென்று அது ஏன் அந்தப்பயத்தை அளிக்கிறது என்று கேட்பவர்கள் அதை பலவாறாக விளக்கியிருக்கிறார்கள்

அதில் முக்கியமான முடிவில்லாததன்மை என்பதுதான். முடிவில்லாதபடி போய்க்கொண்டே இருப்பது பரம்பொருளின் விஸ்வரூபம் என்பதுதான் எளியவனாகிய மனுஷனை பயப்படுத்துகிறது

அதேபோலப் பயப்படுத்துகிறது cycle அதாவது திரும்பத்திரும்ப வாழ்க்கையும் மரணமும் உருவாகுதலும் அழிதலும் இங்கே நடந்துகொண்டே இருப்பது

இந்த ரெண்டு விளக்கத்துக்கும் அப்பால் செல்லக்கூடிய விளக்கம் புல்லாங்குழல் இசையைப்பற்றிய பகுதியிலே வருகிறது. அதாவது ஒன்று திரும்ப வராலமலேயே சென்றுகொண்டே இருக்கக்கூடிய முடிவில்லாமை. முதல் பார்வையில் எல்லாம் திருபத்திரும்ப நடக்கிறது போல இருக்கிறது. ஆனால் அப்படி இல்லை. மனிதர்கள் பிறக்கிறார்கள், சாகிறார்கள். ஆனால் ஒரு மனிதர் திரும்ப வருவதில்லை. ஒரு கூழாங்கல் மாதிரி இன்னொன்று இல்லை. ஒரு நிகழ்ச்சி திரும்ப நடப்பதில்லை

இப்படியே போய்க்கொண்டிருக்கும் முடிவில்லாமையிலே மனுஷனின் ஞானத்துக்கோ அனுபவத்துக்கோ நூல்களுக்கோ முன்னோர் சொல்லிவைத்த ஒண்ணுக்குமோ ஒரு அர்த்தமும் இல்லை. உண்மையில் அர்த்தங்களெல்லாம் மனுஷனே உருவாக்கிக்கொண்ட இந்தச் சின்ன ரவுண்டுக்குள்தான். வெளியே பரம்பொருளின் விஸ்வரூபத்திலே அதெல்லாம் வெயிலில் வைத்த தண்ணித்துளி மாதிரி ஆவியாகியிரும்

அந்த சூன்யம்தான் பயமூட்டுகிறது. அங்கே மனுஷன் நிற்க முடியாது. அதைப்பார்த்ததுமே திரும்பவேனும் என்று அலற ஆரம்பிக்கிறான். அங்கே அவனுக்கு இடமே இல்லை. அவன் இருக்கிறதும் இல்லாமலிருக்கிறதும் சமானம்

அர்ஜுனன் கண்ட விஸ்வரூபத்தை புல்லாங்குழலில் பூரிசிரவஸும் பார்க்கிறான். அதன் பிறகு யாதவப்பையனாக பார்த்து சல்லித்தனமாக ப்பெசுவதாக நினைக்கிறான். அந்த மாயைதான் அவன் விளையாட்டே

சுவாமி