Monday, March 7, 2016

வழுக்குநிலம்



இருந்தும் திரெளபதி எங்கும் தன் செய்கையால் அவமானபடுத்தவில்லை. இன்றும் தேவயானியின் மணிமுடியோடே வந்திருக்கிறாள். ஆனால் பாண்டவர்கள்? உடலை இறுக்கிக்கொண்டு வாய்விட்டும் சிரிக்காமல் இறுதியில் வஞ்சம் கொண்ட பார்வையோடு நோக்குகிறார்கள். 

பாண்டவர்களில் பீமனும் அர்ஜுன்னும் மட்டுமே முக்கியமானவர்கள்.மற்றவர்களை இவர்கள் அளவிற்கு யாரும் முன்னிலைப்படுத்தவில்லை. சகுனி உட்பட அனைவரும், இளையவர்களை விளையாட்டுசிறுவர்களாகவும் தருமனை அறச்செல்வனாகவும் பார்த்தே பழகிவிட்டார்கள்.  'குருடன் மகன் குருடனே' என்று திரெளபதி சொல்லிவிடுவாளோ என்ற நடுக்கம் இருநாட்களாக இருந்தது. ஆனால் அவள் அப்படி சொல்லக்கூடியவள் அல்ல. அதுவும் சபை நடுவில்...அது திரைப்பட/சீரியல் திரெளபதிகள் செய்வது...\

திரெளபதி பிறப்பிற்கும் முன்னாலிருந்து இருக்கும் தாயாதி பிரச்சனையை திரெளபதி தலையில் பிற்கால சூதர்கள் ஏற்றியது பாண்டவர்களை அப்பழுக்கற்றவர்களாக முன்னிருத்தத்தானோ

காளிப்பிரசாத்