Friday, March 4, 2016

சிறுநிகழ்வு





அன்புள்ள ஜெ

வெண்முரசில் ஓர் உச்சம் துரியோதனன் சிறுமைப்படும் இடம். நான் ஒருவிஷயத்தைப் பயந்துகொண்டே இருந்தேன். உங்களை நான் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது காட்டுகிறது. துரியோதனன் அவமதிப்புக்குள்ளாகும் இடம் மகாபாரதம் அடிப்படையில் மிகச்சாதாரணமான ஒரு நிகழ்ச்சி. ஒரு ஸ்லாப்ஸ்டிக் நிகழ்ச்சி. அது ஏன் அற்பமானது என்றால் அந்த சின்ன விஷயம்கூட பெரிய அழிவை உருவாக்கும் என்பதனால்தான். மகாபரதத்தின் சாராம்சங்களில் ஒன்று அது

நீங்கள் துரியோதனனை பெரிய அளவிலே எடுத்துக்கொண்டுபோனபோது அந்த சின்ன நிகழ்ச்ச்சியை பெரிய குறியீடாக எல்லாம் ஆக்கி மகாபாரத ஒருமையை அழிப்பீர்களோ என எண்ணினேன். அப்படி நிகழவில்லை. குறியீட்டுரீதியாக அதிலே எல்லாம் உள்ளது. ஆனால் அபத்தமான சின்ன நிகழ்ச்சியாகவே அது இருக்கிறது. அந்தச்சின்ன விஷயம் ஏன் அப்படிப்புண்படுத்தியது என்பதைத்தான் அந்த கணம் வரைச் சொல்லிவந்த துரியோதனனின் மனநிலை காட்டுகிறது

நன்றி ஜெ. நிறைய தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது

சாம்பசிவம்