Tuesday, March 8, 2016

கருணையின் வஞ்சம்



ஜெ

வெய்யோனின் முடிவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் மனதைக் கனக்கச்செய்தது. கர்ணனின் வீழ்ச்சியை நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் அதுவும் ஒரு பெரும் எழுச்சிதான். அவனுடைய கருணையே அவனை அவ்வஞ்சத்தை ஏற்கச்செய்தது என்று வரும் இடம் நேஞ்சை விம்மச்செய்தது. கர்ணனை நாகதெய்வம் என்றே எண்ணிக்கொண்டேன்

காலம்தோறும் இப்படித்தான். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் கதாநாயகன் போல ஒருவன் அந்த அழிப்பவர்களிடமிருந்தே உருவாகி வருவான். அவனுடைய கருணை அந்த அழிக்கப்படும் மக்கள் மேல் பொழியும். அதுதான் இங்கேயும் நடக்கிறது

அருண்