Sunday, November 1, 2015

வெண்முகில்நகரம் கேசவமணி

அன்புள்ள ஜெயமோகன்,
முதற்கனலில் தகித்து, மழைப்பாடலில் நனைந்து, வண்ணக்கடலில் நீந்தி, நீலத்தில் மூழ்கி, பிராகையில் நீராடி வெண்முகில் நகரத்தின் வாயிலில் நிற்கிறேன். மகாபாரத காலத்திற்கே அழைத்துச் சென்று, அதன் கதை மாந்தர்கள் மனதில் உட்புக வைத்து, அவர்களின் உணர்வுகளை நுட்பமாக படம் பிடித்து, பெரியதோர் வாயிலை திறக்கச் செய்கிறது வெண்முகில் நகரத்தின் தொடக்கம்.


அன்புடன்,
கேசவமணி