Monday, November 2, 2015

இருவர்

மிக அழகாக வந்துள்ள பகுதி ஜெ.  இளைய யாதவன் என்னும் மாயனை அணுகிப்பார்ப்பது என்பது மலையுச்சி விளிம்பில் நின்று குனிந்து நோக்குவதுபோல் மெல்லிய அச்சத்தையும் பேரின்பத்தையும் ஒருசேர அளிக்கிறது.  இருவரையும் நோக்கி நிற்கும் அர்ஜுனன் இத்தருணத்தை மேலும் கூர்மையாக்குகிறான்.  சொல்லுக்குத் தவிக்கும் துறவி, துயரடையும் மாயவன் - இருவரையும் கண்டு சித்தமழியும் வில்லாளி - படிக்கும்போதே பதறுகிறது.

சீனிவாசன்