Friday, August 12, 2016

ஸ்வாத்யாயம்



ஜெ

ஸ்வாத்யாயம் நிகழும் முறை பற்றிச் சொல்லியிருந்த பகுதிகள் ஆழமானவை. எங்கள் குருமரபில் இப்போதும் இந்த வழக்கம் பிர்ம்மசாரிகளுக்கு மட்டும் உண்டு . உச்சந்தலையை துளைத்து சொல் இறங்குவது பற்றிய வரி அதிலே முக்கியமானது. அதுதான் உயிர் கருவுக்குள் உடலுக்குள் இறங்கிச்செல்லும்பாதை என்பார்கள்.

ஒருவரி வருகிறது. ஊடு என்பது பொருள். பாவு என்பது பிரக்ஞை. உலுக்கிய ஒற்றை வரி அது. ஊடுபாவாக நெய்யப்பட்டது இப்பிரபஞ்சம். அப்படி பொருளுக்குள் பிரக்ஞையை சேர்த்து நுணுக்கமாகப்பின்னுவதைத்தான் ஸ்வாத்யாயம் என்கிறார்கள் குருமரபுகளில்

வேணுகோபாலன்